கோவை: மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு

Saturday, August 14th, 2010

ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாலை 3.00 மணியளவில் மேட்டுப்பாளையம் சிறுமுகைரோடு, தாலுகா அலுவலகம் எதிரில் அமைந்துள்ள “மர்ஹும்” மீரான் திடலில் சுமார் 1000 வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு ’பரேட் லீடர்’ பஹ்ருதீன் தலைமையில் நடைபெறும். அணிவகுப்பின் தொடர்ச்சியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் மு.முஹம்ம்து அலி ஜின்னா அவர்களின் தலைமையில் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெறும். பொதுக்கூட்டம் முடிவடைந்த பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியும் நடைபெறும். சுதந்திர தின விழாவை பகிர்ந்து கொள்ள மேற்கு மண்டல மக்கள் அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறோம்.

Disclaimer:This website may contain articles and links of other websites. Views expressed in those articles are author's own opinion and do not necessarily represent that of Popular Front of India